யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் "உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்" எனும் தொனிப்பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரி சங்க தலைவரும் கணக்காளருமான ஏ.நிர்மல் அவர்களின் தலைமையில் யாழ். போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் பங்குபற்றுதலுடம் 2022.01.10 அன்று காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் , வைத்தியகலாநிதி பவித்ரா, பொது சுகாதார பரிசோதகர் த.ரவினதாஸ் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.மேலும், இரத்ததான நிகழ்வில் முப்பத்துநான்கு உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.





