வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினரால் 2022.02.21 அன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் தமது நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கொண்ட மகஜர் ஒன்றினை கையளித்துள்ளார்கள். இதில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் பொலிஸ் திணைக்கள பொறுப்பதிகாரி, வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.






