வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை ஊர்காவற்துறை,நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஒருதொகுதி மீனவர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திலும் குறிகாட்டுவான் இறங்குதுறையிலும் 28.05.2022 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் கௌரவ ராகேஸ் நடராஜன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,ஊர்காவற்துறை ,வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள் கடற்றொழில் சங்க தலைவர் அன்னராசா, மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






