இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ( 30.05.2022 ) ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிவாரணப் பொதியை சம்பிரதாயபூர்வமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கையளித்தார்.தொடர்ந்து நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , இந்திய துணை தூதரக அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

 30ind1 30ind2 30ind3