சிறுவர் மகளிர் அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல்அமைச்சும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.08.2022 அன்று காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சிரேஷ்ட முகாமையாளர் மனோஜ் கேமரத்னகே (ICTA), சிரேஷ்ட முகாமையாளர் திருமதி.சத்திகா யகம்பத் ( ICTA), உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், Geomatry Global Digital team, பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 18ictaw1 18ictaw2