தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையினால் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வும், மெச்சுரை வழங்கல் நிகழ்வும் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 26.08.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டார். அத்தோடு உதவி மாவட்ட செயலாளர் திருமதி எஸ்.சி.என் கமலராஜன், வைத்திய கலாநிதி DR.S.சிவதாஸ் , DR.A.வினோதா மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவி இயக்குனர் ஏ.ரி தர்ஷன, அருட்தந்தை வின்சன் பற்றிக் அடிகளார் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை இணைப்பாளர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் .

இந் நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கல்வி, சிகிச்சை மற்றும் புனர்வுவாழ்வு ஆகியவற்றுக்கு முழுமையாக பங்களித்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க தொடர்ந்து இரண்டு வருட காலமாக தடுப்பு செயற்திட்டத்தில் இணைந்து செயற்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவிமாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், மனநல மருத்துவ நிபுணர் டொக்டர் எஸ். சிவதாஸ், மனநல மருத்துவர் டொக்டர் ஏ.வினோதா, சிக்சையாளர் ப.நிர்மதாஸ், வேல்ட் விசன் முகாமையாளர் நிஷாந்தன், அருட்தந்தை ந. சுபாஷ், அருட்தந்தை நிர்மல், அருட்தந்தை நிமலன், சாந்திகம் இயக்குனர் திலீபன், மாவட்டச் செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இணைப்பாளர் அ.சியாமினி, அருட்தந்தை வின்சன் பற்றிக் அடிகளார், யாழ்.திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவிப் பணிப்பார் ஏ.ரி.தர்ஷன அவர்களினால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

26ndcom5 26ndcom1 26ndcom2

26ndcom3 26ndcom4