USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் (08.09.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வழங்கிவைத்தார்.
இத் தொழில் உபகரணங்கள் உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சங்கானை பிரதேச செயலாளர், IDB நிறுவன வடமாகாண பணிப்பாளர், IDB நிறுவன யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர், USAID நிறுவன பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






