தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்படும் விற்பனைக் கண்காட்சி (19.10.2022) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் இந்த விற்பனைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






