தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (30) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சானிகா மலல்கொட மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர், மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்






