தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரசதிணைக்களங்களங்களிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.
இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக முதலிடத்தை பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.





