யாழ்.மாவட்டச் செயலக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.என். சூரியராஜா தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு (26.12.2022) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அத்தோடு , சர்வமத தலைவர்கள் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி கணக்காளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இத் தேசிய பாதுகாப்பு தினத்தில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையால் மரணமடைந்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது

 26nsd1 26nsd2 26nsd3 26nsd4