அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு 26.03.2023 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களினால் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 123282 குடும்பங்களுக்கு அரிசிப் பொதி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. 28.03.2023ஆம் திகதி வரை 29901 குடும்பங்களுக்கு இவ் அரிசிப் பொதி வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






