யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சகல மக்களிற்கும் இப் புதுவருடம் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், சௌபாக்கியத்தையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்ததோடு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு (2023.04.17) புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையினை உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிஷேசத்தினையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அரசாங்க அதிபரின் ஆசியுடன் கைவிஷேசத்தினை பெற்றுகொண்டனர்.






