யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ விகாராதிபதி ( ஸ்ரீ நாகவிகாரை), மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் இராணுவ கட்டளைத்தளபதி,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர் மற்றும் மாவட்டசெயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





