யாழ்ப்பாண மாவட்ட செயலக மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (01.09.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில், மாவட்ட மற்றும் பிரதேச செயலங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள், நிர்வாக நடைமுறைகள், உத்தியோகத்தர்களின் இடமாற்றம், பதவிநிலை அதிகாரிகளின் பிணைப் பணம் , விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் வாகனங்களிற்கான பராமரிப்பு, மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கள நிலை உத்தியோகத்தர்களின் வரவு, கிராம மட்டத்தில் தகவல் சேகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஷ்குமார் மற்றும் தேசிய கணக்காய்வு சிரேஷ்ட உதவி கணக்காய்வு அத்தியட்சகர், பதில் உதவி கணக்காய்வு அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்
 

3rd quater 01 3rd quater 02 3rd quater 03 

3rd quater 04 3rd quater 05