யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கைவிடப்பட்ட குளங்கள், கேணிகள் முதலான நீர் நிலைகளை துப்புரவு செய்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட வறட்சி நிலவரம் பற்றிய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 29.08.2023 இரண்டாவது நாளாக துப்புரவு பணி இடம்பெற்றுவருகிறது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வல்லிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட முராவில் நீர்த்தடாகம், குறிகட்டு பிள்ளையார் கோவில் நீர்த்தடாகம் ஆகிய துப்புரவு செய்யப்பட்டன.






