பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சேவை நாடிவரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசர தேவைக்குரிய பொருட்கள் அடங்கிய 85 பொதிகள் வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள் ,கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழில்துறையும் தொழில் மேம்பாடும், மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் (2023.10.19) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,உதவி மாவட்ட செயலாளர்,வடக்கு மாகாண மகளிர் விவகாரங்கள் அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திப்பிரிவின் இணைப்பாளர் ஆகியோா் கலந்து கொண்டனர்.
precgnent pack