யாழ்ப்பாண மாவட்ட செயலக நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் ( 09.11.2023) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும், இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட மற்றும்  பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும், அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், தேசிய கணக்காய்வு   முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜெயசேகர ,  தேசிய கணக்காய்வு   அத்தியட்சகர் சுகந்தராஜ், உதவி கணக்காய்வு  அத்தியட்சகர்  P.பற்குணன், உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஷ்குமார் மற்றும்  பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை  உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

Audit 01  Audit 02 

 

Audit 03  Audit 04