யாழ்ப்பாண மாவட்ட செயலக சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஆதரவை மேம்படுத்தும் செயற்திட்டம்(ESPD) தொடர்பான கலந்துரையாடல் (30.01.2024) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட ரில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் திணைக்களமும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களமும், JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய நபர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்தவருடம் பதினொரு இயலாமைக்குட்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், JICA நிறுவன பிரதிநிதி, மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட செயலக இணைப்பாளர், யாழ் மாவட்டத்தில் பிரதேச செயலகரீதியாக தெரிவு செய்யப்பட்ட அங்கவீனர்கள் ,தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Disable 001 Disable 002

  
Disable 003 Disable 004
  
Disable 005 Disable 006
  
Disable 007 Disable 008