வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்தும் தொழில்சந்தையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இத் தொழில் சந்தை 2024.02.20, 2024.02.21ஆம் திகதிகளில் தொழில் ஆலோசனை கல்வி வாய்ப்புகள், தொழில் பொருத்தப்பாடு மற்றும் தொழில் வழங்கும் செயன்முறை ஆகியவற்றை மையப்படுத்தி இடம்பெறுகிறது.
இதில்,வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், சர்வோதய நிறைவேற்று பணிப்பாளர்,வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதி, வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் தொழில் வழிகாட்டல் நிறுவனங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.





