யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் மற்றும் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்வானது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் நலன்புரிச்சங்க தலைவருமாகிய திரு .இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19) காலை 8.30 மணிக்குமாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம் ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான Dr.சிவதாசன் , Dr.இளங்கோ ஆகியோரும் தாதியர்கள் , நலன்புரிச்சங்க செயலாளர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 448507144 993884008803519 7015248993102217054 n 1   448528465 993883602136893 4688004762091513250 n  448573765 993884325470154 7951922847058016422 n  448642165 993883908803529 519204206050337081 n

448655731 993882902136963 3026133464017943389 n  448680269 993884098803510 1497660953902682453 n 448680612 993883412136912 8756075071033629543 n