பாதுகாப்பான தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சேவைகள் தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 2024.07.08 அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலம் பெயர் மக்களின் அனுசரணையில் உதவித்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு பயணம் தற்போது இறுக்கமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளமையால் அரச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் , இது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகம், பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் தொழில் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொழில் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வளவாளராக கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கியதுடன் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.






