யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் (02.09.2024) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதுவரையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.






