இலங்கையின் 15 வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் இறுதிப் பகுதியான கணக்கெடுக்கும் கட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கணக்கெடுக்கும் பணியானது இன்றைய தினம் (16.10.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகை மதிப்பு ஆணையாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலுள்ள கோப்பாய் வடக்கு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் திரு. எஸ். சிவஸ்ரீ, மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ம. வித்தியானந்தநேசன், கோப்பாய் பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் மற்றும் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
 
1 2 3