பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (24.10.2024) மு. ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இவ் வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முன்கூட்டியே வினைத்திறனாக செயற்பட்டமையால் இவ் வேலைத்திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படுவதாக அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதான உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5