மூளாய் முங்கோடை மற்றும் வேரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டமைக்கு மழை நீரோட்டமானது மூளாய் நெடுங்குளத்திற்கு போகாமைக்கான காரணத்தினை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்று (30.11.2024) நேரில் ஆய்வு செய்தார்.
இதன் போது கால்வாய் அல்லது வடிகால் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தினை கண்டறிந்து முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சங்கானைப் பிரதேச செயலாளரை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
 
1 2  4 3