1
 
யாழ்ப்பாணத்திற்கும் மாத்தளைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தல் நிகழ்விற்காக மாத்தளையிலிருந்து வருகைதந்த இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு இன்று பி.ப 01.00 மணிக்கு வருகை தந்தனர்.
வருகை தந்தவர்களுக்கான அறிமுக நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இந் நிகழ்வானது இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தினை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாகவும், மாத்தளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையிலான கலாசாரம், இன மற்றும் மதங்களை ஒன்றிணைக்கப்படும் நிகழ்வாக அமைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ் விஜயம் மொழிமூலம் கலாசார ஒருங்கிணைப்பை வளர்த்து மக்கள் குழுக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு அமைந்தது.
இவ் நல்லிணக்க விஜயத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (தேசிய மொழிகள்) மேலதிகச் செயலாளர் திரு.எம்.எல். கம்மம்பில மற்றும் நிர்வாக அலுவலர் திருமதி.ஏ.ஏ. எப். நதிமியா, யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத், அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மற்றும் மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.
 
 2 3 4 5