பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களைச் சாா்ந்த பங்குதார்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.12.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பால்நிலை வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கான சேவையினையும் மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளை வழங்குவதனை நோக்காகக் கொண்டு குறித்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி என்.எச்.எம். டபிள்யூ.டபிள்யூ. நில்மினி ஹேரத் அவர்கள், பணிப்பாளர் திருமதி. இரேஷ தர்மசேன அவர்கள்,UNFPA ஆலோசகர் செல்வி. உதேனி தேவப்பெரும ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட , பிரதேச மட்டத்தில் ரீதியாக பெண்கள் வன்முறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும், பால்நிலை அடிப்படையிலான தாக்கம் ஓர் பிள்ளையின் கல்வி , விளையாட்டு, கலாசாரம் போன்ற அனைத்து விடயங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் இவ் வன்முறையை தடுக்க பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், அனைத்து பிரதேச செயலக துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து பிரச்சனைகளை தீர்க்க ஒருமித்து முயற்சி எடுக்க வேண்டும் எனவும், இதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் அவசியமானது எனவும் கூறினார்.
மேலும் அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் பணிப்பாளர் கொழும்பிலிருந்து வருகை தந்து கரிசனையோடு இக் கலந்துரையாடலில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களைச் சாா்ந்த பங்குதாரர்கள் பங்களிப்பு, இவ் வன்முறைகளை தடுப்பதற்கான வழிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரினால் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக 15 மடிக் கணினிகள் (Laptop) அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளவளப் பிரிவின் வைத்திய அதிகாரி மற்றும் நட்பு நிலையத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகளின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சாா் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4