Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
Government Service Centers
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரை 02.07.2020 அன்று சந்தித்து கலந்துரையாடினர் .வடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மிகச்சிறப்பான முறையில் நம்மோடு வாழ்ந்த அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களின் மறைவு அனைத்து மட்டங்களிலும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்கள் தன்னுடைய தனித் திறமையினால் அனைவரது மனங்களையும் வெற்றி கொண்டதோடு நிர்வாக ரீதியாக மிகச் சிறப்பான முறையிலே செயற்பட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தார் என்பதுடன் பல நிர்வாகிகளை உருவாக்கியும், ஆற்றுப்படுத்தியும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை இம்மண்ணிற்கு ஆற்றியுள்ளார்.
Second quarter meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 26.05.2020 at 2.00pm under the chairmanship of the Govt. Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium. Head of the branch & Divisional Secretaries of the Jaffna District participated in the meeting. Govt. Agent said that this Audit Management Committee Meeting is guidance for our duties to check & correct our performance whether we perform correctly or not. If any correction we rectify the issues on District level. We have responsible for accountability of public fund. Therefore, every one performs duties based of Laws , Rules & Regulations.
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம் திகதி "உயிரியல் பல்வகைத்தன்மை - இயற்கையின் ஓரிடம்" என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் யூன் ஐந்தாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்த முடியாமையினால் இன்றைய தினம் 09.06.2020 யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல்தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரினால் மரம் நாட்டி வைக்கப்பட்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றது.











