யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களுக்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 15.06.2023 அன்று மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், ஆர்.ராஜன் (வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம்) மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர், மும் மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்






