அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு நேற்று (14.09.2020) மாலை விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்ட தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
|
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், 14.09.2020 அன்று வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திரை நீக்கம் செய்து இன்று 01.09.2020 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததோடு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 160 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சனச அபிவிருத்தி வங்கியினால் அம் மாணவர்களுக்கு பரிசில் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 அனர்த்த சூழ்நிலை காரணமாக வழமையாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வந்த இந் நிகழ்வு இம் முறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |











