அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
- உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.
அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு அதே தினம் மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த நான்கு மாவட்டங்களிலும் - மார்ச் 30ஆம் திகதி காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அதே தினம் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.














