பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல்தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பழைய பூங்கா வளாகமானது முதலாவது அரசாங்க அதிபர் அவர்களினால் தனியாரிடம் கொள்வனவு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் பெயரில் எழுதப்பட்ட வளாகம் எனவும், அவ் வளாகத்திலுள்ள சில காணிகள் ஏற்கனவே அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டு அலுவலகங்கள் செயற்பட்டு வருவதாகவும், வளாகத்தினை சரியான பொறிமுறைகள் ஊடாக பராமரிக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக முறையாக பேண வேண்டிய அவசியத்தினையும் அரசாங்க அதிபர் எடுத்துக்கூறினார்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.பழைய பூங்கா வளாகத்தில் இனிவருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது
3.வளாகத்தில் உள்ள திணைக்களங்களிலிருந்து காணிக்கான விலைமதிப்பீட்டிற்கு அமைய, வாடகை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
4.பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரியின் பாதுகாப்பு கருதி வேலி அமைப்பது தொடர்பாகவும், புனரமைப்பது தொடர்பாகவும் தொல்லியல் திணைக்களத்திற்கு அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது
5.வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது
மேலும், பழைய பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புத் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திரு. எஸ். ரமேஷ்குமார், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. எஸ். சுதர்சன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதிப்பணிப்பாளர் நகர அபிவிருத்தி அதிகாரசபை, பொறியியலாளர் இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன திணைக்களம், தேர்தல் திணைக்களம் மற்றும் நில அளவைத் திணைக்கள ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8  9