யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (09.04.2026) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரோக்கிய உணவக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.






