மறைந்த சிவரத்தினம் இரத்தினகுமார் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சாவல்கட்டு சன்மார்க்கம் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப்போட்டி 2026.07.18 அன்று சாவல்கட்டு மகாத்மா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரி, கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வை ஊக்குவிப்பதுடன், சமூக ஒற்றுமையையும் மறைந்தோரின் நினைவைப் போற்றும் பண்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் பல அணிகள் உற்சாகமாகப் பங்கேற்று, விளையாட்டுத் திறமையையும் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தின.






