யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" என்னும் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ச தொலைநோக்கத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில் மரங்கள் நடுகின்ற நிகழ்வு நடைபெற்றதோடு மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள்.
மேலும் அரசாங்க அதிபர் " 2020 ஆம் ஆண்டில் யாழ்.மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் மக்களிற்கு விரைவாக வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதோடு. அனைத்து மக்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் புதுவருடம் மகிழ்ச்சியாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.








