2002 ஆம் ஆண்டு 24ம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 14.09.2022 யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக நலன்புரி அனுகூலங்கள் பெறும் பொதுமக்ககளை அடையாளம் காண்பதற்கு விண்ணப்பங்களை QR CODE மூலம் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக இணைய வழி ஊடாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் நலன்புரி நன்மைகள் சபை ஆணையாளர் பீ.விஜயரத்ன இணையவழி மூலம் கலந்துகொண்டார். மேலும், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






