வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் யாழ் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகமும் இணைந்து நடாத்தும் ஆடிப்பிறப்பு நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக்கழக தலைவரும் பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (17.07.2023) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலக நலன்புரிக் கழக போசகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

ஆடிப் பிறப்பு நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வேலும்மயிலும் சேந்தன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 


Aadipirappu 06  Aadipirappu 01  Aadipirappu 02  Aadipirappu 05  Aadipirappu 07  Aadipirappu 04  Aadipirappu 03