Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...
Events
News
Government Service Centers
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
|
அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு
31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. |












