Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...
Events
News
Government Service Centers
யாழ் மாவட்ட செயலக மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் இணையத்தளங்கள் மேம்படுத்தல் காரணமாக பெப்ரவரி மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படமாட்டாது என்பதனை அறியத்தருகிறேன்.
நா. வேதநாயகன்,
அரசாங்க அதிபர் .
யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் கனியவளத் திணைக்களம் பற்றியதான பயிற்சி நெறி இன்று (10.02.2020) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் வளவாளராக யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் C. பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.
வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன , வட மாகாண திட்டமிடல் பிரதி பிரதம செயலாளர் திரு சு.உமாகாந்தன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன்,மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் Mr.லால் சமரசேகர,முன்னாள் பணிப்பாளர் திரு. E.L.K.திஸ்ஸநாயக்க , உதவிப் பணிப்பாளர் மற்றும் Ms.யசஸ்மி ஹிக்குருதுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.











