දිසාපති / දිස්ත්රික් ලේකම්

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....පුවත් සහ සිදුවීම්
News
රාජ්ය සේවා මධ්යස්ථාන
அதி மேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களினுடையதும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினுடையதும் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 2020.02.04 ஆம் திகதின்று 72ஆவது தேசிய தினவிழா சுதந்திர
யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில் 25.01.2020 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் YOASHATHI நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. செலீனா பிறேம்குமார்அம்மையாரின் நிதிப் பங்களிப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளினால் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் தேவையறிந்து முதற்கட்டமாக 25 மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் கடந்த திங்கட்கிழமை (20.01.2020) அன்று வழங்கப்பட்டன.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் "பொங்கல் பண்டிகை" இன்று (16.01.2020) காலை 8 மணிக்கு மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.













