வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விஷேட முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஸ நாணயக்கார அவர்களின் வழிகாட்டலின் கீழ் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார அவர்களின் தலைமையில் 09.12.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு அறிக்கை , அவர்களின் மாவட்ட ,பிரதேச செயற்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது "யாழ் மாவட்டத்திலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோா் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்ததுடன், அதிகமாக பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றிருப்பதாகவும் தெரிவித்தாா். மேலும் வடக்கு மாகாணத்துக்கான மொழிப் பயிற்சி நிலையத்தின் தேவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கேற்ற தொழில் கல்வி கல்லூரிகளில் காணப்படாமை" தொடர்பாகவும் கூறினாா்.

இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் S.M.பியதிஸ்ஸ மற்றும் J.S.பிரசாத் பியசேன , பணிப்பாளர் நாயகம் திரு.K.A.S. ஹேமகாந்தி சிரேஷ்ட உதவி செயலாளர்கள் டொனால்ட் மொறாஜ் மற்றும் K.நிகரில்காந் , பிரதிப்பணிப்பாளர் நாயகம் M.P.D.C.W குமாரி, அமைச்சின் அலுவலர்கள் , யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என் கமலராஜன் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிப் பணிப்பாளர் நாயகம் J.A.D.P மஞ்யுளா மற்றும் வடமத்திய மாகாண சிரேஷ்ட முகாமையாளர் H.சுனில் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னாா், முல்லைத்தீவு மாவட்ட ,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டிருந்தார்கள்.

DO1 DO2

 

DO3 DO4

 

DO5

 

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (21.11.2023) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், விவசாயிகளுக்கு  அறுவடைக்குரிய கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும், விவசாய அழிவுகள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவசாய நவீன மயமாக்கல் திட்டம்  தொடர்பாக  விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதோடு, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள பயன்தரு மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டுமெனவும் , பயன்தரு மரங்களாக புளிய மரம், இலுப்பை மரம் மற்றும்  கமுக மரங்கள் ஆகியவற்றை  அதிகமாக நாட்டப்பட வேண்டுமெனவும்  வலியுறுத்தப்பட்டன.
மேலும் கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி  தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்திற்கு பொருத்தமான திராட்சை பழ உற்பத்திக்கான செயற்பாடுகள், செவ்விளநீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம், தென்னை முக்கோண வலய அபிவிருத்திகள் மற்றும்  மீனவ அமைப்புகளின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டன.
அத்தோடு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், விதை நெல் உற்பத்தி தொடர்பாக அதற்குரிய திணைக்களங்கள் தமது பொறுப்புகளை உரிய வகையில் செயல்படுத்த வேண்டுமெனவும்  தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் விவசாய அமைப்புக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அறிவித்தால் அது தொடர்பாக உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்வுகள் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மாவட்ட விவசாய பணிப்பாளர்,விவசாய ஆராய்ச்சி பிரிவு பிராந்திய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஓருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர்,கமலநல சேவை உதவி ஆணையாளர், கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், வங்கிகளின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார்  அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
agri 01 agri 02
 
agri 03 agri 04
யாழ்ப்பாண மாவட்ட  சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 20.11.2023 பிற்பகல் 2.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. 
இதில் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பாக விஷேடமாக கலந்துரையாடப்பட்டதோடு, யாழ் மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலவரம் தொடர்பாகவும், பிரதேச செயலக ரீதியாக டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக கிராம மட்டக்குழுக்களை இயங்க வைத்து பலப்படுத்தல், குறிப்பிட்ட காலவரையறைக்குள் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பாகவும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படவுள்ள   டெங்கு விழிப்புணர்வு பணி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு  தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ,  மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் முப்படையினர் , வைத்தியர்கள் , பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை  அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் , வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாாிகள், ரூபவாஹினி கூட்டுத்தாபன  பிரதிநிதிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் துறை சாா் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
Dengue 01 Dengue 02 
 
Dengue 03 Dengue 04
 
Dengue 05 Dengue 06
 
Dengue 07
யாழ்ப்பாண மாவட்ட செயலக 2023ஆம் ஆண்டுக்கான நிதி, அபிவிருத்தி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 20.11.2023  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வாக்கு தலைப்பு 264 இன் கீழான ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகள், ஏனைய திணைக்களங்களின் கீழான  ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகள், கட்டுநிதிக்கட்டுப்பாடுகள், பாராளுமன்ற அரசாங்க குழுவின் பொதுத் துறை நிறுவனங்களின்  செயலாற்றுகை தொடர்பான மதிப்பீடு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன் உட்பட  மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் மாவட்ட  செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
progress 01 progress 02
 
progress 03progress 04
 
progress 05

2023 ஆம் ஆண்டிற்கான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான மாவட்ட மட்ட முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (14.11.2023) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியம் உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகால்கள் சீரமைப்பு, பாதுகாப்பற்ற கிணறுகளை அடையாளப்படுத்தல் ,   ஆபத்தான பாரிய மரங்கள் மற்றும்  மரக்கிளை ஆகியவற்றை அடையாளங்கண்டு உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கால முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர்,  பிரதேச செயலாளர்கள்,  உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள்,சுகாதார திணைக்கள பிரதிநிதிகள், பொலீஸ் அதிகாரிகள், முப்படைகளின் பிரதிநிதிகள்  மற்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பங்குதாரர்கள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

climate 01 climate 02