ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இம் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் 02.11.2023, 03.11.2023 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதேச செயலக அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில், தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தேசியஅடையாள அட்டை வழங்கல் தொடர்பான கடமைகளினை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், திணைக்களங்களினதும் பிரதேச செயலகங்களினதும் கடமைகள், பொறுப்புக்களை வரையறுத்தல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில்ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி, மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளர், ஆட்பதிவு திணைக்கள பிரதம கணக்காளர், ஆட்பதிவு திணைக்கள இணைப்பாளர், ஆட்பதிவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

NIC 01  NIC 02 

NIC 03  NIC 04

சுற்றுலா ஊக்கப்படுத்தலில் ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (31.10.2023) பி.ப 3.00மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகளை பயன்படுத்துதல் தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர், இராமநாதன் ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், யாழ் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், துறை சாா் விரிவுரையாளர்கள், வடக்கு மாகாண கலாசார திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் துறைசாா் திணைக்கள பிரதிநிதிகள்
ஆகியோா் கலந்து கொண்டனர்
 
Tourist 01  Tourist 02 
 
Tourist 03  Tourist 04 
 
Tourist 05  Tourist 06 
 
Tourist 07  Tourist 08
சமுர்த்தி தேசிய சம்மேளனம் - 2023 மற்றும் மக்கள் பாராட்டு (பிரஜா ஹரசர) தேசிய விருது வழங்கும் விழா கடந்த 2023 ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் மு.ப 8.30 மணிமுதல் ஆரம்பமாகி நடைபெற்றது.
 
இவ் விழாவில் புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பில் மக்கள் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் , சிறந்த சமுர்த்தி சமுதாய அமைப்பின் மக்கள் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநூப பஸ்குவெல் அவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
 
சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பில் தேசிய மட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. அதற்கான கேடயத்தினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அ.சிவபாலசுந்தரன் அவர்கள் சார்பில் மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு ம.பிரதீபன் அவர்கள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநூப பஸ்குவெல் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
 
குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவு 02ம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் மல்லாகம் சமுர்த்தி வங்கி வலயம் 01வது இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘இளைஞர்களுக்கான அழகான ஒரு செய்தி’ எனும் மகுடத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற கரவெட்டி பிரதேச அமைப்பின் அணியின் தலைவர் மற்றும் மாவட்ட மட்டத்தில் சிறந்த தொழில் முயற்சியாளர்களும் பாராட்டப்பட்டனர். அத்துடன் சிறந்த சமுர்த்தி பிரதேச அமைப்புகளான யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை என்பனவும் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
 
Flag day 01 Flag day 02 
 
Flag day 03 Flag day 04
மகளிர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் தேசிய பெண்கள் குழுவின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பெண்களை அரசியல் ரீதியாக வலுவூட்டுவதற்கான இரு நாள் தலைமைத்துவ பயிற்சித் திட்டம் யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 25.10.2023 - 26.10.2023 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணி முதல் பி.ப 4.15 வரை நடைபெற்றது.
இப்பயிற்சி திட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் பெண்களுக்கான அரசியல் பிரவேசத்தின் சவால்களை அடையாளப்படுத்துதல், பெண்களின் அரசியல் பிரவேசத்தின் வரலாறு, இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம், தலைமைத்துவம், தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் செயல்முறை விளக்கம், மகளிர் சங்கங்களின் கருத்துக்கள் செயற்பாடுகள் தொடர்பாகவும் இரண்டாம் நாள் நிகழ்வில் தலைமைத்துவத்தில் உள்ள தடைகள், மகளிர் சங்கங்களுக்கான பெண் தலைவர்களின் பங்களிப்புகள், தலைமைத்துவத்தின் ஊடாக மகளிர் சங்க அங்கத்தவர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல், உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவமும் பெண்களின் நிலைகளும், அரசியலில் பெண்கள் பிரவேசத்தின் நன்மைகள், பெண் அரசியல் தலைவர்களின் அனுபவப்பகிர்வுகள் தொடர்பாகவும் வளவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்கள்.
இதில் வளவாளர்களாக பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் திரு.பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.சி. தேவரஞ்சினி, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு.ஆர்.சி.அமல்ராஜ், திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.ரி.நீலாம்பரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும்,மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கி.தயாபரி மற்றும் பங்குபற்றுநர்களாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல் தளத்தினுள் பிரவேசித்துள்ள பெண்கள் மற்றும் மகளிர் விவகாரக் குழுக்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
ladies leadership 01 ladies leadership 02

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 26.10.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட சட்ட ஒழுங்குகள், விவசாயம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், சமூக பாதுகாப்பு நலன்புரி நன்மைகள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதி பெறும் செயற்திட்டங்கள், சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்தல், விவசாய மற்றும் வயல் நிலங்களில் கட்டடங்கள் அமைத்தலை தடுத்தல், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல், தீவகங்களுக்கிடையிலான கடல் கடந்த போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், சிகையலங்கார தொழிற்ச்சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினரின் கோரிக்கைகளும் ஆராயப்பட்டன. இதில் கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பிரதிநிதி, வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், யாழ் மாவட்ட இராணுவக் கட்டளை தளபதியின் பிரதிநிதி, முப்படையினர், விஷேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தரகள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

dcc 01 dcc 02 dcc 04 dcc03 2 dcc 05 dcc 06 dcc 07