


சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துதல் தொடர்பான அறிவூட்டல் பயிற்சிப் பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 04.10.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயல்படுத்தி அறிக்கையை Google forms மூலம் நிகழ்நிலையினூடாக சமர்ப்பிக்கும் நிகழ்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள்அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சி.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் எவ்வாறு செயற்படுத்தல் என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்


யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் "வல்லுவம்" காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்று (06.10.2023) பி.ப 12.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இவ் இலத்திரனியல் சஞ்சிகை 36 பக்கங்களை கொண்டதாகவும் கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியதாகவும் காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவரவுள்ளது.
இவ் இலத்திரனியல் சஞ்சிகை வெளியீட்டில் பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் இலத்திரனியல் சஞ்சிகை வெளியீட்டுக் குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
வல்லுவம்" இலத்திரனியல் சஞ்சிகையினை கீழுள்ள இணைப்புக்கள் மூலம் வாசிக்க முடியும்.
http://jaffna.dist.gov.lk/index.php/en/downloads/magazine.html











