கைத்தொழில் அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நாடு முழுவதும் வணிக விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நோக்கில் (01.09.2023) யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வை மேற்கொண்டது.
இவ் ஆரம்ப நிகழ்வு கௌரவ கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர , யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜன் , வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் , துறைசாா் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் முதல் முறையாக இடம்பெறுவதோடு
குறைந்த மட்டத்தில் இயங்கும் கைத்தொழில் நிறுவனங்களை விருத்தி செய்யும் வகையிலும், கைத்தொழில் பேட்டை நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இடம்பெறுவதோடு, கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கட்டியெழுப்புதல் மற்றும் மேம்படுத்துதல், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருட்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் இடம்பெறுகிறது.
நாட்டின் தற்போதுள்ள கைத்தொழில் முயற்சி 15% உள்ள நிலையில் இதனை 2030 ஆம் ஆண்டில் 25 %மாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளாக இவை எதிர்பார்க்கப்படுகின்றது .
இந்நிகழ்வானது செப்ரெம்பர் 1,2, மற்றும் 3 ஆம் திகதிகள் வரை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

industrial 01 industrial 02 

industrial 03 

industrial 04 industrial 05 

யாழ்ப்பாண மாவட்ட செயலக மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (01.09.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில், மாவட்ட மற்றும் பிரதேச செயலங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள், நிர்வாக நடைமுறைகள், உத்தியோகத்தர்களின் இடமாற்றம், பதவிநிலை அதிகாரிகளின் பிணைப் பணம் , விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் வாகனங்களிற்கான பராமரிப்பு, மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கள நிலை உத்தியோகத்தர்களின் வரவு, கிராம மட்டத்தில் தகவல் சேகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஷ்குமார் மற்றும் தேசிய கணக்காய்வு சிரேஷ்ட உதவி கணக்காய்வு அத்தியட்சகர், பதில் உதவி கணக்காய்வு அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்
 

3rd quater 01 3rd quater 02 3rd quater 03 

3rd quater 04 3rd quater 05

யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் (15.08.2023 ) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
 
மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளான கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம் மற்றும் மேசைப்பந்தாட்டம் என நான்கு வகையான போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்று முடிவடைந்திருந்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிளைத் தலைவர்கள், விளையாட்டுத்துறை பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்
 
Indoor prize 01  Indoor prize 02  Indoor prize 03  Indoor prize 04  Indoor prize 05  Indoor prize 06   Indoor prize 07
சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான  சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த கண்காட்சி 29.08.2023 மற்றும்30.08.2023 நல்லூர் முத்திரைச்சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற
ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கமலகுமாரி கருணாநிதி, தொழிற்துறை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நூறு வரையான முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளதுடன் கண்காட்சியினை பார்வையிட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு தரமான உற்பத்தி பொருட்களைகொள்வனவு செய்து பயன் பெறுமாறும் யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
 
மேலும், ஒவ்வொரு வார இறுதியிலும் மாவட்ட செயலகத்தினால் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது
SED 01   SED 02    SED 03  SED 04

குறைந்த வருமானம் மற்றும் சமுர்த்தி குடும்ப அங்கத்தவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கும் ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பினை பெற்று தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்குமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து ஜப்பான் மொழிப் பயிற்சி நெறி வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

ஜப்பான் மொழி பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜப்பான் நாட்டு இலங்கைக்கான தூதுவர் Mr. Mizukoshi hideaki அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக (2023.08.11) இக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஜப்பான் மொழிப்பயிற்சி நெறி மையம் ஆரம்பிக்கத் தேவையான நடைமுறைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களின் முன் மொழிவுடன் கலந்துரையாடப்பட்டதுடன், ஜப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு தொடர்பான விளக்கம் (பேராசிரியர். முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ) அவர்களால் வழங்கப்பட்டது.

அத்துடன் ஜப்பான் மற்றும் தமிழ் மொழி தொடர்பான நல்லிணக்க கலாசார நிகழ்வு ஒன்றை ஒழுங்கமைத்து நடாத்துவது மற்றும் கற்றல் பிரச்சினைகள் தொடர்பாகவும்; மாணவர்களின் பயிற்சி நெறி அங்குள்ள தொழில் வாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் மற்றும் தூதுக்குழுவினர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), ஜப்பான் மொழிப் பயிற்சி வளவாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர், Undp அலுவலர்கள், உட்பட துறை சார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
Japan Language 01  Japan Language 02  Japan Language 03  Japan Language 04