கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வடமாகாண சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான "Made in sri lanka வர்த்தக கண்காட்சி" யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்று 06.10.2023 ஆம் திகதி முற்பகல் 9.00மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகளவான பொதுமக்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
இக்கண்காட்சி 06 மற்றும் 7,8 ஆம் திகதிகள் வரை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 8.00 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாகாண உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் வர்த்தகக் கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களான கடல் சாா் உணவுகள், பனை , தும்பு சாா் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், தோல் உற்பத்திப் பொருட்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன்பந்துலசேன அவர்கள் கலந்து கொண்டதோடு, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் லசந்த காரிய பெரும, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக செயலாளர் A.லக்கதாஸ், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் N.நந்தகோபாலன், தொழிற் திணைக்கள பணிப்பாளர் திருமதி. வனஜா, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், , பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கையின் கரையோர பிரதேசங்களில் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சுனாமி அனர்த்த ஒத்திகை வேலை திட்டம்(IO WAVE -23) திருகோணமலை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை கொண்டு நடாத்தப்பட்டது. அதன் ஒரு செயற்பாடாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஆழிப்பேரலை முன்னாயத்தமும் சவால்களும் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (04) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், இலங்கையின் இட அமைவு, அதன் முக்கியத்துவம் , இயற்கை இடர் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த தயாா் நிலை, பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தங்களின் பாதிப்புகள் மற்றும் அவை தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சபை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து மழை காலத்தில் வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு முன்னாயத்த திட்டங்களை தயாரித்தல் வேண்டும். அத்தோடு வடிகால்களையும் துப்பரவு செய்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி பணிப்பாளர் (Dmc), யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாநாகர ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபையின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ பங்குதாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.


கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலத்துடன் இணைந்து வடமாகாண சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான " Made in Sri Lanka - Trade Fair 2023" வர்த்தக கண்காட்சியினை ஒக்டோபர் மாதம் 06,07 மற்றும் 08 ஆம் திகதிகளில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படவுள்ளதால் , அக்கண்காட்சியினை பாா்வையிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு தரமான உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து பயன்பெறுமாறும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் கேட்டுக்கொள்கின்றது





