01Saw1

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு" என்ற திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் நோக்குடன் 500 சௌபாக்கிய உற்பத்திக்கிராமங்கள் அங்குராப்ர்பணம் செய்யப்படுவதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 16 சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

14

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் வரவேற்புரையுடன் இன்று (17.03.2021) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.குறித்த தேசிய நிகழ்ச்சித் திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ திரு.மகிந்தானந்த அளுத்கமகே, கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ திரு.கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சாள்ஸ்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ திரு.அங்கஜன் இராமநாதன், அமைச்சின் செயலாளர்கள், கௌரவ தவிசாளர்கள், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,

4

"எங்களுடைய இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுத்திறனை வெளிக்கொணர்வதற்கும், ஒழுக்கம் மிக்க நல்லதொரு சமூகமாக உருவாகுவதற்கும் விளையாட்டு நிகழ்வுகள் அவசியம்" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதியினுடைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழான கிராமிய மற்றும் 

5"மகளிர் ஒவ்வொருவரும் தமது உரிமைகளை போராடித்தான் பெற்று வந்துள்ளார்கள். இந்தப் போராட்டம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் இவ் வருட சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் "சர்வதேச மகளிர் தினம் மற்றும் யாழ். மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும்" நிகழ்வு இன்று (08.03.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

11

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் 06.02.2021  அன்று  காலை 9மணிக்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.